உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

மருத்துவமனை ஊழியருக்கு டெங்கு காய்ச்சல்

பரங்கிப்பேட்டை :

           பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார்.

                 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருபவர் அருள்பிகாசம் (40). கடந்த 18ம் தேதி பணியில் இருக்கும் போது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். அவரை கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவு திரும்பாததால்,மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது.  அவரை, தனி அறையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior