உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

கரும்பு வயலில் தீ: ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

                கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு பயிர் எரிந்து நாசமானது. வேப்பூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த கரும்பு பயிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior