உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

மூவரை தாக்கிய இருவருக்கு வலை

சிதம்பரம் : 

                    அரிசி கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வடக்கு மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியர் பழனிசாமி மூன்று சக்கர சைக்கிளில் அரிசி மூட்டைகளை கடைக்கு ஏற்றிக் கொண்டு வந்தார். கூத்தாடும் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது அனந்தீஸ்வரன் கோவில் தெரு வெள்ளையன் மகன் பிரபு, எடத்தெரு நடராஜன் மகன் கணேசன் இருவரும் பழனிசாமியை வழிமறித்து அரிசி மூட்டைகளை இறக்கும்படி கூறி தாக்கினர்.தகவலறிந்த ரத்தினசபாபதி மற்றும் சிவக்குமார் இருவரும் சென்று தட்டிகேட்டனர். அவர்களையும் உருட்டு கட்டையால் தாக்கினர். காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பிரபு, கணேசன் இருவரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior