உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிதம்பரத்தில் சாலை போடும் பணி

சிதம்பரம் : 

               சிதம்பரத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போல்நாராயணன் தெரு சாலை 12 லட்சம் ரூபாய் செலவில் போடும் பணி துவங்கியது. சிதம்பரம் நகரில் போக் குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலூர் மார்க்கம் இருந்து சீர்காழி மார்க் கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் போல் நாராயணன் தெருவழியாக திருப்பி விடப் பட்டது.  இதனால் கனரக வாகனங் கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அந்த சாலை வழியாக சென்று வருகிறது. ஆனால் அந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவில் இருந்தது. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக தண் ணீர் தேங்கி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கலெக்டரின் மாவட்ட பொது நிதி 12 லட்சத்தில் சாலைபோட ஒதுக்கீடு செய் யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக பணி நடந்து வருகிறது. 8 மீட்டர் அகலத்தில் சாலை உயர்த்தி போடப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior