உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

உழவர் சந்தைக்கு வாருங்கள் : வேளாண் அலுவலர் அழைப்பு

விருத்தாசலம் : 

              பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடையுமாறு வேளாண் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து விருத்தாசலம் உழவர் சந்தை வேளாண் அலுவலர் நந்தினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                   விருத்தாசலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக 50ம் குறைவில்லாத விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள், பழங்களை விற்கின்றனர். குறைந்த விலை, சரியான எடை விற்கப்படுவதால் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது நிறைய அளவில் உழவர் அடையாள அட்டை கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். எனவே பொதுமக்கள் உழவர் சந்தையால் பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior