உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு

சிதம்பரம் : 

                அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கல்வி சுற்றுலா சென்ற சிறுபான்மை மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகள் கல்வி சுற்றுலா சென்றனர். அதில் புவனகிரியில் இருந்து 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த 2ம் தேதி தென் மாவட்டங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றவர்கள் கடந்த 6ம் தேதி திரும்பினர். அவர்களை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மதினா, ராமலு, மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியர் சுந்தரம் ஆகியோர் வரவேற்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior