உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

புதுச்சேரி வங்கி அதிகாரி உடல் கடலூரில் கரை ஒதுங்கியது

கடலூர்: 

                        புதுச்சேரியில் காணாமல் போன வங்கி அதிகாரியின் உடல் கடலூர் கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26). ஏலம்பம் பாரதி கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி அலுவலத்திலிருந்து டெபாசிட்தாரர்களை கேன்வாஸ் செய்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
 
                             வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவரது தம்பி அரவிந்தராஜ் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஆனந்தராஜை தேடிவந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை கடலூர் சோனங்குப்பம் கடற்கரையில் ரத்த காயங்களுடன் ஆனந்தராஜ் உடல் கரை ஒதுங்கியது. கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என்பது குறித்து துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior