உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க ​ உத்தரவு

சிதம்பரம்:

                             ​ சிதம்பரத்தில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து "தினமணி'யில் புகைப்படத்துடன் வெளியான செய்தியையடுத்து,​​ அதை சீரமைக்குமாறு மத்திய அரசு பழங்குடியினர் நல தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

                    குடியிருப்பின் அவல நிலை குறித்து வெளியான செய்தியையடுத்து,​​ புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மக்கள் குறைதீர்க்கும் பிரிவு செயலர் ஏ.வி.​ வீரராகவன்,​​ இதுகுறித்த செய்திக் குறிப்புடன் பழங்குடியினர் நல தேசிய ஆணைய இயக்குநருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பினார். இதையடுத்து,​​ துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை உடனடியாக நேரில் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ இதுகுறித்த அறிக்கையை பழங்குடியினர் நல தேசிய ஆணையத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பெ.​ சீதாராமனுக்கு பழங்குடியினர் நல தேசிய ஆணையத்தின் இயக்குநர் இ.​ தசரதன் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior