உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

மானியத்தில் காய்கறி விதைகள்,​​ பழக்கன்றுகள் விநியோகம்

பண்ருட்டி:

                     ​ கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்,​​ நிலவளத் திட்டத்தின் மூலம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்படுவதாக பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,​​ 

           கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் கெடிலம் நதி மேம்பாடு நீர்,​​ நிலவளத் திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்பட உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராம விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு வாழை,​​ கொய்யா,​​ கத்தரி,​​ வெண்டை விதைகள் மற்றும் தேவையான இடுபொருள்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மனம்தவிழ்ந்தபுத்தூர்,​​  நத்தம்,​​ சிறுகிராமம்,​​ வீரப்பார்,​​ திருவாமூர்,​​ எலந்தம்பட்டு,​​ செம்மேடு,​​ சேமக்கோட்டை,​​ மணப்பாக்கம்,​​ சிறுவத்தூர்,​​ எல்.என்.புரம்,​​ பூங்குணம் மற்றும் செட்டிப்பட்டரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம். பயன்பெறும் விவசாயிகள் 10 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில புலஎண் நீர்,​​ நிலவள பாசன பகுதிக்குள் வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு,​​ பண்ருட்டி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior