உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

வன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : பணியாளர் கூட்டுறவு சங்கம் முடிவு

கடலூர்:  

                        தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களின் கூட்டமைப்பின்  மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பரமாத்மா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மோகன்குமார், மண்டலத் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் காந்தி, அரிதாஸ், இணை செயலாளர்கள் ஜெயந்தி, மகளிரணி செயலாளர் மோகன், தணிக்கையாளர், கருணாநிதி, வேல்முருகன், மதுரை, சங்கர், சாந்தி பங்கேற்றனர். கூட்டத்தில்,  பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் தமிழக அரசின் 6வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியத்தை மாற்றி ஊதிய ஆணை வழங்கக் கோரி முதல் கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது, 2ம் கட்டமாக 15ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, 3ம் கட்டமாக 22ம் தேதி சென்னை அரசு தலைமை பொது மருத்துவமனை எதிரில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது. கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior