உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

மக்களை அச்சுறுத்திய குரங்குகள் காப்பு காட்டில் விடப்பட்டது

ராமநத்தம்: 

                      ராமநத்தத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். ராமநத்தம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துவந்தன. இவைகள் அவ்வப்போது வீடுகளில் புகுந்து வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பொருட்கள், உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்தன. குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் துரைசாமிக்கு புகார் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் வனசரக அலுவலர் அருளானந்தமூர்த்தி தலைமையில் தொழுதூர் பிரிவு வனவர் ஏகாம்பரம், வன காப்பாளர் சக்கரவர்த்தி, வன காவலர் தில்லைகோவிந்தன், கோட்ட காவலர்கள் பழனிவேல், ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் சுற்றி திரிந்த 23 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அதனை நயினார்பாளையம் காப்பு காட்டில் விட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior