உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டை இல்லை : ஏரிப்பாளையத்தில் விபத்து அபாயம்

பண்ருட்டி: 

                          பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம்  கெடிலம் ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டைகள் இல்லாததால்  விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம் - செம்மேடு செல்லும் கெடிலம் ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டைகள்  கடந்த மூன் றாண்டுகளாக தொடர்ந்து இடிந்து சேதமாகி வருகிறது. ஆனால் இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் இரவு நேரத்தில் எதிரில் வாகனங்கள் அதிக ஒளி ஏற்படுத்தும்போது பாலத் தின் தடுப்பு சுவர் கூட இருப்பது தெரியாமல் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து செம் மேடு அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலதடவை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் பாலத்தின் தடுப்பு கட்டை அமைத்து வர்ணம் பூசி பராமரிக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக பாலத்தில் உடைந்துள்ள தடுப்புக் கட்டைகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior