உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்: 

                        குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி., யிடம் மனு கொடுத்துள் ளனர். கடலூர் அடுத்த குமரப்பரெட்டிச்சாவடி கிராமத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர் தி.மு.க., வில் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இரு கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம் பத் தலைமையில் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், எங்கள் கிராமத்தில் 70 குடும்பங்கள் உள்ளன. செல்லஞ்சேரியைச் சேர்ந்த சுரேஷ் மற் றும் குமரப்பரெட்டிச்சாவடியைச் சேர்ந்த ராமலிங்கம், உலக ரட்சகன் உள் ளிட்ட 7 பேர் எங்கள் ஊரில் உள்ள வைக்கோள் போர் மற்றும் மாட்டுகொட்டகைகளை அடிக்கடி கொளுத்தி வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் புகார் செய்தால், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக போலீசாசர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior