உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய மூவர் கைது

 நெய்வேலி: 

                        என்.எல்.சி., சுரங்கத் தில் திருடிய மூவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். என்.எல்.சி., இரண் டாம் சுரங்கத்தின் தெற்கு பகுதி மேல் மண் நீக்க பகுதியில் பல்வேறு ராட்சத இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இருந்த 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் கப்ளர்களை திருடிச் சென்ற கம்மாபுரம் சுப்ரமணியன் (43), கார்த்திக் (25), மகேந்திரன் (26) ஆகியோரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வர்மா தலைமையிலான போலீசார் பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior