உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் குழுவினருக்கு விருது வழங்கும் விழா

கடலூர்: 

                         கடலூரில் சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் குழு தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கடலூர் எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி கேதார்நாதன் முன்னிலை வகித்தார். துணை வட்டார தளபதி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் 6 பேருக்கும், குழு தலைவர்கள் 6 பேருக்கும் விருது வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை குடும்பத்தில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் மாவட்டத்தில் முதல் மூன்று  இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் கோட்ட தளபதி கோவிந்தராஜ், ஊர்க்காவல் படை தளபதிகள் இருசப்பன், ஜெயச்சந்திரன், தண்டபாணி, அந்தோணிசாமி, தில்லை சேரன், பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior