உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

சிதம்பரத்தில் அண்ணாதுரை நினைவு தினம்

சிதம்பரம்: 

                    சிதம்பரத்தில் நகர தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் மேல வீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஜேம்ஸ் விஜயராகவன்,  நகர தலைவர் ஆறுமுகம், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், கவுன்சிலர்கள் வெங்கடேசன், மணிகண்டன் மற்றும் மாயா மச்சேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க.,: நகர செயலாளர் சுந்தர் தலைமையில் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று வண்டிகேட் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், உமாதேவி,  தேன்மொழி, தொகுதி செயலாளர் அருள், குமார், பாண்டியன் பங்கேற்றனர். ம.தி.மு.க.,: நகர அலுவலகத்தில் உள்ள அண்ணாதுரை படத்திற்கு நகர செயலாளர் சீனுவாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட தலைவர் பெருமாள், ரத்தின சொக்கலிங்கம், கண்ணன், ஜெயபால், சவுந்திரராஜன், குமார், கோபால் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior