உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

ரேஷன் கடையில் முறைகேடு:​ ​ விற்பனையாளர் சஸ்பெண்ட்

கடலூர்:

                ​ ரேஷன் கடையில் முறைகேடு காரணமாக,​​ குறிஞ்சிப்பாடியை அடுத்த அம்பலவாணன்பேட்டை நியாய விலைக் கடை பெண் விற்பனையாளர் சுராஜி,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனின் உத்தரவின்பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பலவாணன் பேட்டை நியாயய விலைக் கடையில்,​​ மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.​ அப்போது உளுந்து,​​ துவரம்பருப்பு எடை குறைவாக வழங்கியதும்,​​ பில் வழங்கி விட்டு சர்க்கரை வழங்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.​ மேலும் பாமாயில்,​​ துவரம் பருப்பு,​​ உளுந்து ஆகியவை இருப்பு குறைவாக இருந்ததும் தெரியவந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior