உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

கடலூரில் அண்ணாதுரை நினைவு நாள் : தி.மு.க.,- அ.தி.மு.க., மாலை அணிவிப்பு

கடலூர்: 

                          கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி சிலைக்கு  தி.மு.க.,-அ.தி.மு.க.,மற்றும் ம.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் ஊர்வலமாக சென்று மஞ்சக் குப்பம் மணி கூண்டு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வன்னியர்பாளையம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தனர், நிகழ்ச்சியில் முன்னாள் எம். எல்.ஏ., புகழேந்தி, சேர் மன் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் நாராயணன், துணை செயலாளர் பூங்காவனம், இளைஞரணி ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ஆதிபெருமாள், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                       அ.தி.மு.க.: மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் கட்சியினர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமரன், அவைத் தலைவர் அருணாசலம், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் சுப்ரமணி, மீனவரணி செயலாளர் தங்கமணி, துணை செயலாளர்கள் முருகுமணி, தவமணி, வக்கீல் அணி ரவீந்திரன், மருத்துவரணி சீனுவாசராஜா, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, இளைஞரணி தலைவர் மாதவன்  பங்கேற்றனர்.

                 ம.தி.மு.க.,: மாவட்ட செயலாளர் பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் வேலு, முன்னாள் நகர செயலாளர் செல்வம், வக்கீல் மன்றவாணன் பங்கேற்றனர்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior