உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

அண்ணாதுரை நினைவு நாள்

நெல்லிக்குப்பம்: 

                  நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., சார்பில் அண் ணாதுரை நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர் அண்ணாதுரை படத்திற்கு நகர தலைவர் முகமது அனிப் மாலை அணிவித்தார். மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் பழனிசாமி, ஜெயசீலன், தனகோடி, இளைஞரணி பன் னீர்செல்வம், பார்த்தசாரதி, குணசேகரன் கலந்து கொண்டனர்.
 
                   அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சம் பத் அண்ணாதுரை படத் திற்கு மாலை அணிவித் தார். நகர செயலாளர் சவுந்தர், பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், நகர தலைவர் மனோகர், ரங்கராஜன், சாந்தி பங்கேற்றனர். ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு நாள் அனுஷ் டிக்கப்பட்டது.
 
                        தி.மு.க., நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பூவராகசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் சிவசண்முகம், இளைஞரணி செல்வக்குமார் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், நகர தலைவர் சின்னப்பன், பொரு ளாளர் தியாகராஜன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior