உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு கடலூரில் 22ம் தேதி முகவர்கள் தேர்வு

கடலூர்:

            அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூரில் நடக்கிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில் முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூர் பீச்ரோட்டில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 புகைப்படம், கல்விச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று ஆகியவற்றுடன் அணுகவும். மேலும் 5,000 மக்கள் தொகைக்கு குறைவான பகுதியில் உள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சியும், 5,000க்கும் அதிமுள்ள மக்கள் தொகை பகுதியில் உள்ளவர்கள் 12ம் வகுப்பும் தேர்ச்சியும், அடிப் படை கணிதத்திறனும் பெற்றிருக்க வேண்டும். மற்ற காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனுமதிக்கப் படமாட்டாது. இத்தகவலை கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior