உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

சேத்தியாத்தோப்பை தாலுகாவாக பிரிக்க வேண்டும்: தே.மு.தி.க.,

சேத்தியாத்தோப்பு:

               சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவா பிரிக்க வேண்டும் என தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்தில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தே.மு. தி.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளார் லூர்துசாமி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சபா சசிகுமார், மாலை செயற்குழு உறுப்பினர் ராமையன், மாவட்ட அமைப்பாளர் லட்சுமிகாந்தன், இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் சீனு உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் கீரப்பாளையம் ஒன்றியம் சார்பில் 10 பேர் சென்று தேர்தல் பணியாற்றுவது, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் அமைத்து தே.மு.தி.க., கொடியேற்று விழா நடத்துவது, சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior