உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர்: 

            கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முதல் வீட்டிற்குச் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

                     பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 8ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன்படி கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9 பேரும் கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏழாம் நாளான நேற்று சங்க கடலூர் கிளை தலைவர் நடேசன் தலைமையில் வீட் டிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். 

விருத்தாசலம்: 

                 கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் சங்க மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, சம்பத் உள்ளிட்ட 13 பேர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior