உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

கீழச்சாவடி- நடராஜபுரம் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

கிள்ளை:

               குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ள கீழச்சாவடி-நடராஜபுரம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அடுத்த கீழச் சாவடியில் இருந்து உத்தமசோழமங்கலம், ராதா விளாகம், கோவில்பள்ளம், நக்கரவந்தன்குடி வழியாகவும், நடராஜபுரம் குமாரமங்கலம் என இரு வழியாக சிதம்பரம் செல்லும் சாலை உள்ளது. சிதம்பரத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டதால் சுற்றுப்பகுதியில் உள் ளவர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் கீழச்சாவடியிலிருந்து நடராஜபுரம் வரை சாலை குண்டும், குழியுமாக மாறியதால், சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது ராதாவிளாகத்துடன் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிள்ளை பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்த சாலையை விரைந்து சீரமைத்து, அரசு பஸ்சை மீண்டும் முடசல்ஓடை வரை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior