உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெய்வேலி:

                  பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மந்தாரக்குப்பம் அடுத்துள்ள சிவாஜி நகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (29). இவர் வளையமாதேவி கிராஸ் ரோடு அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று ரமேஷை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தனது மனைவியை கொலை செய்தது, சீர்காழி, மயிலாடுதுறையில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது, டாஸ்மாக் கடையில் திருடியது, சிறையில் கிடைத்த நட்பை வைத்து நண்பனின் மைனர் மகளை கட்டாய திருமணம் செய்து கொண்ட விபரம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர். ரமேஷ் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், ரமேஷை மந்தாரக்குப்பம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior