உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

விவசாயிகளுக்கு மானியத்தில் உர மூட்டைகள்

திட்டக்குடி:

               மங்களூர் வட்டார செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டன. மங்களூர் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் மானியத்தில் எக்டேருக்கு டி.ஏ.பி., மற்றும் பொட்டாஷ் உரம் தலா ஒன்று வழங்கப்படுகிறது. ஆவினங்குடி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் 30 விவசாயிகளுக்கு உர மூட்டைகளை வழங்கினார். இதேபோல தொழுதூரில் 30, இடைச்செருவாய் 30, ம.புடையூர் 60 என 150 விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்பட்டன. துணை வேளாண் அலுவலர் டென்சிங், வேளாண் உதவி அலுவலர் குணசேகரன், உதவி அலுவலர்கள் பிரகாஷ், சின்னதுரை, ரமேஷ் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior