உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

நெய்வேலி இந்திரா நகரில் புறக்காவல் நிலையம் திறப்பு

நெய்வேலி:

           நெய்வேலி இந்திரா நகரில் சீரமைத்த புதிய புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., திறந்து வைத்தார். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வந்த தொடர் திருட்டை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டது. அதனை டி.ஐ.ஜி., மாசானமுத்து திறந்த வைத்தார். சில மாதங்களில் மின் கசிவால் ஏற் பட்ட தீ விபத்தில் புறக்காவல் நிலையம் சேதமடைந்தது. இதனை வடக்குத்து ரோட்டரி கிளப் சீரமைத்தது.இதன் திறப்பு விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார். வடக்குத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஜெகன், தாமோதரன், சடையப்பன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., மணி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ் பெக்டர்கள் ரேவதி, நடராஜன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior