உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

உதவித் தொகைகளை உயர்த்த வேண்டும்: தொழிலாளர் முன்னணி தீர்மானம்

பண்ருட்டி:

              விவசாய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் 2 லட்சம் இறப்பு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணியின் மாநில செயற்குழுக்கூட்டம் பண்ருட்டியில் நடந்தது. வட்டார தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் மாதேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இதில் காங்., மாநில மாணவரணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் வழங்குவதை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகை, பேறுகால உதவி தொகைகளை இருமடங்காக உயர்த்த வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் ஆர்முள்ளவர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்க வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior