உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்


ராமநத்தம்: 

                 தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப் பீட்டு திட்டத்தின் கீழ் வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை சுகாதார நிலையத் தின் கிராமங்களில் உள்ள இருதயம், சிறுநீரகம், தைராய்டு, எலும்பு முறிவு, கைனகாலிஜிஸ்ட் உள் ளிட்டவைகள் குறித்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருச்சி மாருதி மருத்துவமனை டாக்டர் சாந்தினிபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். திருச்சி வாசன் கண் மருத்துவமனை சம்பூர் ணம், கதிரவன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, டாக்டர் ள் பிரேம்நாத், திருமாவளவன் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் திருச்சி மாருதி மருத்துவமனை டாக்டர்கள் அருண்மகேந்திரன், விஜயகுமார், ராஜேஷ், மங்களூர் வட் டார மருத்துவர்கள் உதயகுமார், ஜெய்சியா, கனிமொழி, கவிதா, கலைச் செல்வி, ராஜேஷ்வரி உள் ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு இருதயம், எலும்பு, தைராய்டு, கைனகாலஜி, கண், காது, மூக்கு உள்ளிட்டவைகள் குறித்த சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட நோயாளிகளில் காது, மூக்கு, தொண்டை நோயாளிகள் 14 பேர், தைராய்டு, எலும்பு தலா ஒருவர், கைனகாலஜி 14 பேரை திருச்சி மாருதி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், இருதய கோளாறு உடைய இருவர் சென்னை மலர் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior