உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளி

புவனகிரி: 

                  புவனகிரியில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிறுவகை பயிர் கள் குறித்து வயல்வெளிப் பள்ளி வகுப்பு நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கனகசபை தலைமை தாங்கினார். பயிற்சியில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் ஞானசேகரன் முன்னிலையில் சுற்று சூழல் ஆய்வு, உளுந்து பயிரில் நன்மைகள் மற்றும் தீமைகள் செய்யும் பூச்சிகள் குறித் தும், அத்தகைய பூச்சிகளை இனம் கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் உளுந்து பயிறுக்கு மருந்துகள் தெளிப் பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் நடனசபாபதி, வீரலிங் கம், பாக்கியராஜ் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior