உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம்

பரங்கிப்பேட்டை: 
 
              பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வசாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம் நிலை உள்ளது. வாகனங்கள் ஓட்ட 18 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும், முறையாக பயிற்சி பெற்று லைசன்ஸ் எடுத்த பிறகே மொபட் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்ட முடியும். ஆனால் பரங்கிப்பேட்டை பகுதியில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட்களை ஓட்டி வருகின்றனர். மேலும் லைசன்ஸ் இல்லாதவர்களே அதிகமானவர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இதனால் பரங்கிப்பேட்டை பகுதிகளில் அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து வருகிறது.லைசன்ஸ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டும் போதே அடிக்கடி விபத்துகள் நடந்துவரும் நிலையில் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள், லைசன்ஸ் இல்லாதவர்கள் மொபட் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டி வருகின்றனர். லைசன்ஸ் இல்லாதவர்கள் விபத்து ஏற்படுத்தினாலோ, விபத்து ஏற்பட்டாலோ எந்தவித இழப்பீடும் பெறமுடியாது. எனவே சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பரங்கிப்பேட்டை பகுதியின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior