உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் காயம்


கடலூர்: 

                     கோஷ்டி மோதலில் எரிக்கப்பட்ட வீடுகளின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் அடுத்த நாயக்கநத்தம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் வழிசோதனைப் பாளையத்தை சேர்ந் தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு வழிசோதனைப் பாளையத்தை சேர்ந்தவர்கள் நாயக்க நத்தம் காலனியில் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு ஜெயபால் மகன் ரகுபதி(11), தண்டபாணி மகன் மகேந் திரன்(11) இவரும் எரிந்த தங்களது வீடுகளில் எஞ்சிய பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தனர். அதில் மின்சாரம் தாக்கிய இருவரும் தூக்கியெறிப்பட்டு படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் இருவரையும் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior