உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு: கடலூர் கல்லூரியில் கருத்தரங்கம்


கடலூர்: 

                நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பெரியார் அரசு கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உடல் உறுப்புதானம், ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. பெரியார் அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நேசக்கரங்கள் நிறுவனர் நேச முரளி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தமிழ் செல்வன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., இள புகழேந்தி உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து பேசினார். அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் திவ்யா கண் குறைபாடுகள், கண், மற்றும் உடல் தானம் பற்றி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரகுமார், கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி, நேசக்கரங்கள் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாகாவீர்மல் மேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட் டம் தோறும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கென தனி அலுவலகம் அமைக்க வேண்டும். உடல் உறுப்புதானம் செய்யும் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior