உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா

பண்ருட்டி:

                  அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ரெக்சி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் புதுச்சேரி மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயன்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரமிளா சிறப்புரையாற்றினார். வளர் இளம் பெண் கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கு தயார்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. இதில் பெண் கள் முன்னேற்ற ஆசிரியைகள் அமலோற்பவம், எஸ்தர்ராணி மற்றும் மல்லிகா, புனிதா, ரேவதி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக், புனித அன்னாள் பொறியியல் கல்லூரி, முத்தையர் பள்ளி, புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior