உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

குடிநீர் குழாயில் மின்மோட்டார் இணைப்பு: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

திட்டக்குடி:

                    குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் இணைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                        திட்டக்குடி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வாடகை, உரிமக்கட்டணம் ஆகியவற்றை மார்ச் 29க்குள் செலுத்தி, அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குப்பைகளை தெருவிலும், வடிகாலிலும் கொட்டமல் சேகரித்து வைத்து பேரூராட்சி குப்பை சேகரிப்பு வண்டிகளில் கொட்ட வேண்டும். மேலும் பேரூராட்சி குடிநீர் பைப் லைன்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைப்பதில் தடையும், கூடுதல் நேரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரேற்ற மின்விரயம் ஏற்படுகிறது. அவ்வாறு மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தெரிந்தால் உடனடியாக மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior