உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

உலக தண்ணீர் தின ஊர்வலம்

கடலூர்:

                    உலக தண்ணீர் தினத்தையொட்டி பிளாரன்ஸ் ஹோம் பவுன்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கடலூர் உழவர் சந்தையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன் துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புதுப்பாளையம் ஏ.ஜெ.ஆர்., திருமண மண்டபத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் மழைநீரை சேமிப்போம், நிலத்தடி நீரைபெருக்குவோம், குறைந்த அளவு நீரில் விளையும் உணவு தானிய பயிர்களுக்கு முக் கியத்துவம் கொடுப்போம், தண்ணீர் மாசு படுதலை தடுக்க வலியுறுத்தி சென்றனர். பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு நகராட்சி கமிஷனர் குமார் தலைமை தாங்கினார். நிறுவன செயற்குழு உறுப்பினர் ஜான்டேவிட் வரவேற்றார். செயலாளர் அலெக்ஸாண்டர் அறிமுக உரையாற்றினார். பிளஸ் இயக்குனர் அந்தோணிசாமி, கிரீடு இயக்குனர் நடனசபாபதி, குமார், சாமிநாதன், பஞ்சாப் நேஷனல் வங்கி முத்துக்குமார், நிறுவன தலைவர் உஷாராணி, பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior