உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விலங்கு செல் வளர்ப்பு பயிலரங்கம்

சிதம்பரம்: 

                சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய அளவிலான 'விலங்கு செல் வளர்ப்பு முறைகள்' குறித்த பயிலரங்கம் நடந்தது.

                 பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் பயிலரங்கை துவக்கி வைத்து, மருத்துவத்தில் விலங்கு செல் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன் பயிலரங்கின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அறிக் கையை படித்தார். அறிவியல் புல முதல்வர் டாக்டர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் பாண்டே பயிலரங்க மாணவர்களுக்கு விலங்கின செல்களில் மைட்டோகான்ட்ரியாவின் செயல்பாடுகளை அறியும் முறைகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.

                       சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக டாக்டர் பால் சாலமன் மற்றும் பாரதிதாசன் பல்கலை டாக்டர் அக்பர்ஷா சிறப்பு பயிற்சி வகுப்பு எடுத்தனர். பயிலரங்கத்தின் நிறைவு விழாவில் துறைத் தலைவர் புகழேந்தி பயிலரங்கத்தின் வெற்றி குறித்து பேசினார்.ஆராய்ச்சி இயக்குனர் வேணுகோபால், மேனன் ஆகியோர் பயிலரங்கில் கற்றுக்கொண்ட விலங்கு செல் வளர்ப்பு முறைகளை தங்கள் ஆராய்ச்சியில் பயன்படுத் திக் கொள் ளுமாறு பயிலரங்கில் பங்கேற்றவர்களை கேட்டுக் கொண்டார்.உதவி பேராசிரியை கனிமொழி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior