உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

மாற்று திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு பாராட்டு


திட்டக்குடி:

                தமிழக அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றிய மாற்று திறன் பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து தமிழக உடல் ஊனமுற்றோர் சங்க கூட்டமைப்பின் மத்திய, மாநில அரசுப்பணி மாற்று திறனாளிகள் நலச் சங்க மாநில தலைவர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கை: 

                தமிழக அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொகுப் பூதியத்தில் ஐந்தாண்டாக பணியாற்றிய மாற்று திறனுடைய பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியும், மேலும் இத்துறை பயிற்சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கி உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior