உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

விருத்தாசலம்:

                    கவுரவ விரிவுரையாளர் கள் பணி நிரந்தரம் செய்யகோரி தொடர்ந்து 15 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யகோரி கடந்த 15 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 17 ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்க மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, பொருளாளர் சம்பத் உள்ளிட்ட 13 பேர் கடந்த ஆறு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior