உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

முதியவர்களுக்கு உதவித் தொகை

நெய்வேலி:

                     நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்சி நடந்தது. நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிட நிதி வசூலித்தனர். அதனை ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ராமச் சந்திரன் வரவேற்றார். ஜவகர் கல்விக் கழக பொரு ளாளர் மதிவாணன் ஹெல்பேஜ் இந்தியாவின் உதவி இயக்குநர் சிவக்குமாரிடம் 6 லட்சத்து எட்டாயிரத்து 54 ரூபாயிற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜார்ஜ் ஜேக்கப், உறுப்பினர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சந்திரசேகர ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு அதிக அளவில் நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior