உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

துவரையில் அதிக லாபம் பெற வேளாண் அதிகாரி ஆலோசனை


பண்ருட்டி:

                 பண்ருட்டி பகுதியில் துவரை பயிரிட்டு எக்டருக்கு லட்சம் ரூபாய் லாபம் பெற விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து  வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                  துவரை பயிரை இறவையில் தனி பயிராக பயிரிட்டால் நான்கு மாதங்களில் எக்டருக்கு ஒரு லட்சம் லாபம் பெறலாம். துவரை பயிர் உளுந்து, பாசிபயிறு, கொள்ளு பயிர்களை விட எக்டருக்கு அதிக உற்பத்தி திறன் கொண்டவை. துவரை வறட்சியை தாங்கி வளரும். எல்லா பருவத்திற்கு ஏற்றவாறு பலவித ரகங்கள் உள்ளன. சாகுபடி செலவு, ஆட்கள் தேவை குறைவு. தனிப்பயிர், ஊடுபயிர், கலப்பு பயிர் மற்றும் வரப்பு பயிராக பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் பயிரிடலாம். அறுவடை செய்தல், விதையினை அடித்து பிரித்தெடுத்தல் எளிது. கால்நடைகளுக்கு தீவனம் தரும். மண்ணில் அளவற்றசரகுகளை உதிர்த்து உயிரற்ற மண்ணை உயிர்பிக்கும். உற்பத்தியை அதிகரிக்க சரியான ரகம் தேர்வு செய்து பருவத்தில் பயிரிட வேண்டும். பயிர் எண்ணிக்கையை சதுர மீட்டருக்கு 8 செடிகள் வீதம் எக்டருக்கு 80 ஆயிரம் செடிகள் பராமரிக்க வேண்டும். ரைசோபியம்,பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உர நேர்த்தியும், டிரைக்கோடர்மா விரிடி பான்ற உயிர் பூசன விதை நேர்த்தி செய்தல் அவசியம். களை கட்டுபாடு, 2 சதவீத டி.ஏ.பி.இலைவழி உரமாக தெளித்தல், சரியான நீர் நிர்வாகம், காலத்தே அறுவடை செய்தல், குறுகிய கால ரகங்கள் வம்பன்-1, வம்பன்-3, ஏ.பி.கே.-1, பிரபாத் ஆகியவை 70 நாட்களில் பூத்து 100 நாட்களில் எக்டருக்கு சராசரியாக 1000 கிலோவும், அதிகபட்சமாக 3,000 கிலோ மகசூல் உற்பத்தி திறன்கொண்டவை. விதை முதல் அறுவடை வரை தொழில்நுட்பங்களை வழுவாமல் கடைபிடித்து தீவிர சாகுபடி செய்தால் விவசாயிகள் லாபம் அதிகம் பெறலாம். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior