உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

அரிமா நிர்வாகிகள் இருவருக்கு சிறந்த செயலாளர் விருது

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் இருவருக்கு சென்னையில் நடந்த விழாவில் சிறந்த செயலாளர் விருது வழங்கப்பட்டது. பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. அதில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விருத்தாசலம் அரிமா சங்க சுரேஷ்சந்த் சிறந்த தலைவராகவும், கடலூர் காஸ் மோபாலிடன் சங்க துளசிதாசிற்கு சிறந்த செயலாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்னாட்டு அரிமா சங்க முன்னாள் இயக்குனர் ராமகிருஷ்ணன் வழங்கினார். விழாவில் முன்னாள் இயக்குனர் ராமசாமி, ஆளுனர் ரத்தினசபாபதி, முன்னாள் மாவட்ட ஆளுனர் ராஜலட் சுமி செல்வகாந்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior