உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

சிதம்பரம் ​ அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் அவசர சிகிச்சை பிரிவு


மூடப்பட்டு இருக்கும் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு.
 
சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.​ இதனால் விபத்தில் அடிபட்டு வருபவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.​ உடனடி சிகிச்சை இல்லாததால் கடலூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலர் இறந்துவிடும் நிலை உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனை 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.​ மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.​ 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.​ ​ 
 
                        இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.​ தற்போது மருத்துவமனையில் 12 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.​ அவர்களில் பாதி பேர் மாற்றுப் பணிக்கு சென்று விடுதால் குறிப்பிட்ட 4 டாக்டர்களே தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.மயக்க மருந்து டாக்டர்,​​ எலும்பு முறிவு டாக்டர் ஆகியோர் இல்லாததால் 20.9.2009-ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.​ ஆண் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.​ தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் மாதம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் நியமனம்  செய்யப்படவுள்ளனர் என முதன்மை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior