உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

கான்சாகிப் வாய்க்கால் பகுதியில் வீசப்படும் எலும்புகளால் சீர்கேடு


கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் ஓரப்பகுதியில் சாக்கு மூட்டையில் வீசப்படும் எலும்பு கூடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் - கிள்ளை சாலையில் உடையான்மேடு, கொடிப்பள்ளம் வழியாக மேலச்சாவடி வரை செல்லும் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் ஓரப்பகுதியில் சில சமூக விரோதிகள் பசு மாடு கன்று ஈன்றதும், போடும் உறுப்புக்கொடி மற்றும் இறந்த மாடுகளின் தோலை எடுத்துக் கொண்டு, எலும்புடன், மாமிசங்களை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரத்தில் போட்டு விடுகின்றனர். இதனால் நாய்களின் தொல்லை ஒரு புறம் இருந்தாலும், துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நாய்கள் சாக்கு மூட்டையில் உள்ள எலும்பு கூடுகளை இழுத்துவந்து சாலையில் போட்டு செல்கிறது. சாக்கு மூட்டையில் கால்நடைகளின் எலும்புக் கூடுதானே எனஅலட்சியம் காட்டமால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior