உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

உலக தண்ணீர் தினம் ஓவிய கண்காட்சி


கடலூர்:

                    உலக தண்ணீர் தினத்தையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூரில் ஓவிய கண்காட்சி நடந்தது.உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஓவிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் சுப்ரமணியபுரம் ஸ்ரீ ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தண் ணீரின் அவசியம் குறித்து வரைந்த 100 ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். தொண்டு நிறுவன செயலாளர் ஆறுமுகம், குமார், உமாதேவி, வக்கீல் தேசிகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior