உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

போலி நிர்வாகிகளை கண்டித்து ஆசிரியர் கூட்டணி ஊர்வலம்

கடலூர்:

                   தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூரில் ஊர்வலம் நடந்தது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு போட்டியாக அதே பெயரில் பதிவு செய்யப்பட்ட சங்கத்தை கண்டித்தும், அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் சுப்புராயலு நகரில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். ஊர்வலத்திற்கு மாநில தலைவர் காசி தலைமை தாங்கினார். பொருளாளர் ராசு முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் சிறப்புரையாற் றினார். மகளிரணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, பாத்திமா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior