உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை விடுதலையான கைதிகள் பட்டியல் தயாரிப்பு: எஸ்.பி.


கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களில் துப்புதுலக்க, சிறைச் சாலைகளில் இருந்து அண்மையில் விடுதலை ஆகியிருக்கும் கைதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மத்திய சிறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலையான கைதிகளின் கைவரிசையாக, இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸிடம் திங்கள்கிழமை கேட்டதற்கு, கடலூர், திருச்சி, புதுவை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப் பட்ட கைதிகளின் பட்டியல் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் பகுதியில் போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் முடுக்கி விடப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார் எஸ்.பி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior