உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.3.5 லட்சத்திற்கு ஏலம்


கடலூர் : 

               மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் 3 லட் சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 60 வாகனங்கள் நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அதில் 56 இரு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் என 57 வாகனங்கள் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின்போது கூடுதல் எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன், கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior