உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

மாஜி ராணுவ வீரர் கொலை: இருவர் கைது


திட்டக்குடி : 

                 திட்டக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் காலனியைச் சேர்ந்தவர் முத்து அரங்கசாமி மகன் கண்தமிழ் இளவழகன் (42). முன்னாள் ராணுவ வீரர். பெரம்பலூர் ஹாலோபிளாக் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் அம்பேத்கர் (36), அவரது நண்பர் முத்துக்குமரன் (26) இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகில் நின் றிருந்த வக்கீல் அம்பேத் கர், முத்துக்குமரன் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு வீச்சரிவாள்களை பறிமுதல் செய்து, திட்டக்குடி மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட் புறக்கணிப்பு

                கொலை வழக்கில் வக்கீல் அம்பேத்கர் கைது செய் யப்பட்டதை கண்டித்து திட்டக்குடியில் மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் தங்க கொளஞ்சிநாதன் தலைமையில் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior