உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது: மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதி

 திட்டக்குடி : 

                   மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அவர்  கூறுகையில் '

                  கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு தாலுகாவாக 'காஸ்' பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. டி.ஆர்.ஓ., தலைமையில் பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாவில் முடிந்துள்ளது. போலி ரேஷன் கார்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான மேல் முறையீட்டு மனுக்கள் இரண்டு கட்டமாக முடிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பந்தமான புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior