உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

அரசு அலுவலகங்கள் இயங்கும்,​​ பஸ்கள் ஓடும்

 கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ வழக்கம்போல் பஸ்கள் ஓடும்.​ அரசு அலுவலகங்கள் இயங்கும்.​ மின்சாரம்,​​ பால் விநியோகம்,​​ மருத்துவமனைகள்,​​ குடிநீர் விநியோகம்,​​ உணவகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.​ 

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ 

                  கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில்,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.​ மாவட்டத்தில் 1,800 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.​ பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான குடிநீர்,​​ மின்சாரம்,​​ பால்,​​ மருத்துவமனைகள்,​​ உணவகங்கள் ஆகியவை இயல்பாகச் செயல்பட காவல் துறை மூலம் பாதுகாப்பு அளிக்க,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு உள்ளன.​ பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior